உங்கள் நல்வரவை எதிர்ப்பார்த்து தூவிய அன்பு மலர்கள்...

உங்கள் நல்வரவை எதிர்ப்பார்த்து தூவிய அன்பு மலர்கள்...

தாயுமானவர்...










   

 


அப்பா...
இந்த வார்த்தையில்தான் எத்தனை
உணர்வுகள்...
அத்தனை உறவுகளுக்கும்
வித்திட்ட சொல்...
தனிமையிலும் தன்னம்பிக்கை
மந்திர சொல்...

பத்துமாதம் கருவில்தாய்
சுமக்க…
மீதி மொத்தமாக உறவில்
சுமந்தவரே…
இன்று நதியில்
கலந்திட்டு…
கண்களை  குளமாக்கி
சென்றீரே...

 உறவான செல்வங்களை
உயர்திட்ட
ஆலமர விழுதுகள்
நீங்கள்...
இன்று சரணாலயம் 
இழந்த
வேடந்தாங்கல் பறவைகள்
நாங்கள்...


உங்கள் கனவுகளை
அர்ப்பணித்து...
எங்கள் கனவுகளுக்கு
வித்திட்டு...
இடர்களை இறக்கி
வாழ்வை தொடர 
வழிகூறாமல் எங்கு
சென்றீரோ... 


உங்கள் விரல் பிடித்து
ஊர்வலம் புரிய
ஆசை...
உங்கள் பாதங்களை மயிலிறகாள்
வருடிட ஆசை...
இன்று நீங்கள்
இங்கில்லையானதும் கனக்கிறதே
என் இதயம்...

ஊருக்காக வாழ்ந்தோர்
சிலர்…
உறவுக்காக வாழ்ந்தோர்
பலர்…
நல் உள்ளங்களுக்காக வாழ்ந்த
எம் தந்தையே...
எவர்க்கு உய்யும் இனிஉங்கள்
தோழமை...?

எங்கள் வீட்டு வெண்ணிலவாம்
நீங்கள்...
இன்று சூரியோதயத்தில்
உறங்கிவிட்டீரோ...?
அஃனி குஞ்சில்
கலந்துவிட்டீரோ...?
உங்கள் பிறிவு ஆற்றாமை
துடைத்தொழிக்க வருவீரா...?

எண்ணத்தில் நின்று
நெஞ்சத்தில் நிலைத்து
வண்ண மலர்  பூங்காவாய்
வாசம் சொறிந்து…
கண்ணிமைக்கும் நேரத்தில்
காலனுடன் கலந்திட்டீரே…
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
தந்தையாக வருவீரா...?

உண்டென்பார் சிலர்
இல்லையென்பார்....
எனக்கில்லை கடவுள் ஜாதி
மதபேதம்...
உங்கள் பகுத்தறிவு
போதனைகள்...
இன்றும் எங்கள் சிந்தனைகளில்
நதிப்பிரவாகம்...

எங்கள் வெற்றிக்கு
முன்நின்று...
தோல்விக்கு தோள் கொடுத்த
உற்ற தந்தையே...
நீங்கள் அரவணைப்பில்
என்றும் எங்கள்
தாயுமானவர்...
 
 
 
 

 

பட்டினி தேசம்


பசி... பசி... பசி...
ஓர் உயிரின் அபயக்குரல்...!
உடல் மயிரெல்லாம்
ஒன்று சேர்ந்து சிலிர்த்து
விழிவழியே உப்புநீரை
வரவழைக்கும் மரணக்குரல்...!

ஏனோ வயிற்றில் உருதெரியா
ஓர் வலி...
உயிர்கொல்லும் வலி...
உருவம் காணா உடல்
அதில் ஒட்டிய வயிறு...
மெல்லிய கால்கள்
விரல் தொலைத்த கைகள்
ஒளி மங்கிய கண்கள்...
இதுதான் எங்கள் தேசம்
கண்ணீர்.. உமிழ்நீர்...குடிநீர்...
பேதம் அறியா தேசம்
பட்டினி தேசம்...!

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
என்றான் பாரதி...
நீங்கள் எந்த தேசத்தையும்
அழிக்க வேண்டாம்...
எங்கள் தேசத்திற்கு உணவு
அளியுங்கள்...
பட்டினியை அழித்து...
நாங்களும் வாழ்ந்திட
மனிதர்களாக...!

மரம்...? மனிதம்...?


கொட்டும் பனியில்
வெட்டும் குளிரில்
துகிலுரிந்த மரங்கள்
காண்கிறேன்...

துன்பமே அறியாமல்
துயரே நினைவாமல்
துவண்டு விலாமல்
தழைத்திடுவோம் மீண்டும்
என்ற அறைகூவல் என்
காதில் விழுகிறது...

என் மனம் அறிந்த
உண்மை...
கண்கள் மட்டும் உதாசீணம்…
நிழல் தரும்
தருவெங்கே…?
சுவை தரும்
கனியெங்கே…?
மணம் தரும்
மலரெங்கே...?
மனம் தொலைத்த
நானிங்கே...!

இன்றும் தேடுகிறேன்
பதில்...
நான் உதிர்ந்த இலைகளின்
இனமா...?
தழைத்தோங்கும் மரங்களின்
இனமா?
மனிதாபிமானம் இழந்த
மனித இனமா...?

மௌனம்...


நீ அறிய நியாயமில்லைதான்...











நதிகள்...


வரவேற்பு


இந்த மலர்கள் உன் வருகையை
எதிர்ப்பார்த்து தூவிய
மலர்கள்...

இனி உன்வாழ்வில் வசந்தம்
மணம்வீச தூவிய
மலர்கள்...

நேற்று மனதை வருடிய துன்பம்
இன்றகன்றிட தூவிய
மலர்கள்...

இனியெல்லாம் சுகமே என்று
வாழ்த்திட தூவிய
மலர்கள்...

உன் வருகைக்கு காத்திருந்து
நான் தூவிய அன்பு
மலர்கள்...